×

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ஓமலூர், ஏப்.7: ஓமலூர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில், தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் சிவராமன், இளம் வழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த வாரத்தில் நடந்தது. மொத்தமுள்ள 115 வாக்குகளில் 109 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், மூத்த வழக்கறிஞர் சிவராமன் 83 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவகுமார் 25 வாக்குகள் பெற்றார். இதனால் 58 வாக்குகள் வித்தியாசத்தில் சிவராமன் வெற்றி பெற்றார். மேலும், செயலாளராக ஜெமினி சங்கர், பொருளாளராக அசோக்குமார், துணை தலைவராக ராஜகுரு, இணை செயலாளர் தங்கராஜ், நூலகராக சித்தார்த்தசங்கர், செயற்குழு உறுப்பினர்களாக நெப்போலியன், பிரம்மராஜகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றுகளை, தேர்தல் அதிகாரிகள் வழங்கியதையடுத்து, புதிய நிர்வாகிகள் அனைவரும் முறையாக பதவியேற்று கொண்டனர்.

The post புதிய நிர்வாகிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Omalur ,Omalur Bar Association ,Sivaraman ,Sivakumar ,Dinakaran ,
× RELATED ஓமலூர் உட்கோட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது